முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை:
திமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசி , தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
இதன் பின் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதன் பின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் பாலகிருஷ்ணரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுச்சொத்து சேதவழக்கில் தரப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்.எனக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.தீர்ப்புக்கு தடைவிதிக்கவேண்டும்.”நான் அந்த வழக்கில் 72-வது குற்றவாளி” . “காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் என் மீது வழக்கு உள்ளது “.காவல் ஆய்வாளரை திட்டியதால் என் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் பெயரை சொல்லவில்லை .தீர்ப்பு வந்தவுடனேயே அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டதால் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த உயர்நீதிமன்றம் ,பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிகிக்கப்பட்ட தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது . பாலகிருஷ்ணன்ரெட்டி அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துச்செல்வதில் முன் மாதிரியாக இருக்க வேண்டும். 3ஆண்டு சிறைதண்டனையை தடுக்க சொன்னால் சரி. தீர்ப்பையேஏன் தடுக்கவேண்டும்.ஏன் தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்து செல்வதில் முன்மாதிரியாக இருக்கனும்.ஏன் தீர்பை தடை செய்ய வேண்டும்.பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ்நீதிமன்றம்அளித்ததீர்ப்பு தவறுஎன கூறுகிறீர்களா? என்றும் தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள் என்றும் கேள்வி எழுப்பியது .காவல்துறையின்விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு:
இந்நிலையில் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.பாலகிருஷ்ணரெட்டி விடுத்த கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…