பீகாரில் 3 பெண்களை சூனியக்காரி என கூறி சிறுநீர் குடிக்க வைத்த அவலம்..!

பீகாரில் சூனியக்காரி என்று மூன்று பெண்களை கூறி இரவு முழுவதும் கட்டி வைத்து துன்புறுத்தி, சிறுநீர் கழிவுகளை குடிக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் உள்ள பர்ணியா மாவட்டத்தில் இருக்கும் மக்களில் சிலர், 3 பெண்களை சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டி அவர்களை கயிற்றால் வீட்டில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவர்களிடம் மனித கழிவுகளை உட்கொள்ள வைத்துள்ளனர். இந்த மூன்று பெண்களில் ஒருவர் சிறுபான்மை இனத்தவர். இந்த சம்பவத்தில் சிக்கிய பெண்களில் ஒருவரது உறவினர் சகோதரரின் மனைவியை மற்ற இரு பெண்கள் சேர்ந்து காண வந்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர்களை சந்திக்க வந்துள்ளனர். அப்போது அங்கிருக்கும் மக்கள் இவர்களை காட்டி இவர்கள் சூனியக்காரிகள் என்று கூறியுள்ளனர். மேலும், 10 முதல் 12 பேர் சேர்ந்து மூவரையும் வீட்டில் கட்டி அடைத்து வைத்துள்ளனர். பின்னர், இவர்கள் மூவரையும் இரவு முழுவதும் தாக்கி, மனித கழிவுகளையும், சிறுநீரையும் குடிக்க வைத்ததாக அந்த பெண்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்துள்ளது. ஆனால், இவர்கள் 3 பேரும் திங்கள்கிழமையன்று சம்பவம் நிகழ்ந்த மோஹினி ஆதிவாசி டோலா பகுதிக்கு உட்பட்ட கஸ்பா காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறை அதிகாரி சாந்தன் குமார் தாக்கூர் 11 நபர்கள் மீது சூனிய எதிர்ப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். இதில் இதுவரை 2 பேர் கைதான நிலையில் மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களை சூனியக்காரிகள் என்று தாக்கும் நிகழ்வு பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாகவே சூனிய எதிர்ப்பு சட்டம் மற்றும் அபராதம் போன்றவை விதிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

IPL2024: சாம் கரன் அதிரடி.. ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…

22 mins ago

2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்… பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..

சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…

5 hours ago

என்னது 150 கோடியா? முடியவே முடியாது ‘GOAT’ படத்தை வாங்க மறுத்த நிறுவனம்!

சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…

5 hours ago

அவர் பசியோட இருக்காரு .. அவர டீம்ல எடுத்துருக்கனும் ..! இளம் வீரருக்கு கங்குலி ஆதரவு !!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…

5 hours ago

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அவரச கடிதம்.!

சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…

5 hours ago

வெயில் காலத்தில் ஏற்படும் சூட்டு கொப்பளம் நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ.!

Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…

6 hours ago