Shankar [File Image]
இந்தியன் 2: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் உட்பட பலர் நடித்துள்ள “இந்தியன் 2” ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமொஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஷங்கரின் சினிமாப் பயணம் மற்றும் அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து கூடுதல் தகவல்களை இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறிஉள்ளார். ஆம், ஷங்கர் தனது அடுத்தடுத்த 3 படங்களின் விவரத்தை தெரிவித்துள்ளார்.
ஆதாவது, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படமும், அடுத்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் எடுக்க உள்ளதாகவும், அறிவியல் அம்சங்களை சார்ந்த (SciFi) கதைக்களத்துடன் ஒரு படம் என அந்த படத்தை 2012 என்ற பெயரில் உருவாக்க உள்ளதாக கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்த 3 திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகவும், VFX காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்றும், புதுப்புது தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும், கேம் சேஞ்சர் படப்பிடிப்பு 15-20 நாட்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது, இந்தியன்2 வெளியான பிறகு அதை முடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்தியன் 2 ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. படத்தில் கமலை தவிர, காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா, காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…
புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…
நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…