டெல்லியில் சாகர்பூர் பகுதியில் வசித்து வரக்கூடிய 24 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அந்த பெண் தனது குழந்தைகளுடன் வெளியில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் கத்தியால் குத்தி அவரை கொலை செய்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் பெயர் ஆர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பெண் உடல் தீன்தயாள் உபாத்யா மருத்துவமனையில் அனுப்பப்பட்ட போது, அவர்கள் இறந்து விட்டதாக உறுதி செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் மதியம் 2 மணியளவில் நடந்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும், உயிரிழந்த ஆர்த்தி எனும் பெண்ணை கொலை செய்த நபர் அவரது அண்டை வீட்டாராக ஒரு காலத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அண்டை வீட்டில் வசித்து வந்தவர் தான் வேறொரு இடத்திற்குக் குடி பெயர்ந்து உள்ளதாகவும், அவர் தான் இந்த கொலையை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL2024: . சென்னை அணி 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற…
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் நடைபெற்றதாக கூறி, கடந்த மார்ச் மாதம்…
உதயநிதிக்கு எதிரான சனாதன தர்மம் குறித்த வழக்கில் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்…
கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண் படத்தை தவறவிட்டதால் பெரிய படத்தை…
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12…
பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது. உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல…