#2019 RECAP: சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டது முதல் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது வரை .!

  • கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது.
  • செப்டம்பர் 7-ம் தேதி நிலவிலிருந்து 2.1 கி.மீ  தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் பின்னர்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூலை 22  ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என  தெரிவித்தது.

கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.

இதை தொடர்ந்து  ஆகஸ்ட் 20-தேதி முதல் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து  நிலவை  சுற்றி வந்தது. பின்னர் ஆகஸ்ட் 28-தேதி நான்கு கட்டம் உள்ள நிலையில் மூன்றாவது கட்டத்தை சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக எட்டியது என இஸ்ரோ தெரிவித்தது. அப்போது செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என கூறியுள்ளது.

பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2- ஆம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.

செப்டம்பர் 7- ஆம் தேதி நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர் அதிகாலையில் நிலவில்  தரையிறக்க திட்டமிடப்பட்டது. எரிபொருள் உள்பட 1471 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டருக்குள் பிரக்யான் ரோவர் இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில்   நிலவில் விக்ரம் லேண்டர் படிப்படியாக தரையிறங்க கட்டளை கொடுக்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர்  விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர்.

இதையடுத்து லேண்டரை  கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது.  விக்ரம் லெண்டரின் பகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை வெளியிட்டது.இந்நிலையில் மதுரை சார்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை வந்தார்.

அவர் செப்டம்பர் 17 ,அக்டோபர் 14, 15, நவம்பர் 01-ம் ஆகிய தேதிகளில் நாசா தங்கள் செயற்கைக்கோள் மூலம்  எடுத்த புகைப்படங்களை  வெளியிட்டு வந்தது. அந்த புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன்  ஆய்வு செய்ததில் விக்ரம் லேண்டரின் பாகங்களை இருப்பதாக கண்டுபிடித்தார்.

தான் கண்டுபிடித்ததை சுப்பிரமணியன் நாசாவுக்கு  மெயில் அனுப்பியுள்ளார். சுப்பிரமணியன் ஆய்வை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்து சுப்பிரமணியனுக்கு  நன்றி தெரிவித்தனர்.

murugan

Recent Posts

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…

21 mins ago

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்.! மக்கள் கடும் அவதி!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…

1 hour ago

நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்…88 தொகுதிகளில் 63.50% வாக்குப்பதிவு.!

Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…

1 hour ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…

2 hours ago

பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…

3 hours ago

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

9 hours ago