உலகம்

ரஷ்யா : தேவாலயங்கள் மீது குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்.. 15 பேர் பலி!!

ரஷ்யா : ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் வடக்கு காகசஸ்  தாகெஸ்தானில் உள்ள ஒரு ஜெப ஆலயம், இரண்டு ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் மற்றும் ஒரு போலீஸ் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தொடர்ச்சியான இந்த பயங்கர தாக்குதல்களில் 15-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பாதிரியார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெப ஆலயம் மற்றும் தேவாலயம் இரண்டும் டெர்பென்ட்டில் அமைந்துள்ளன. இதனை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதில், பொதுமக்கள் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இருப்பினும், மொத்த இறப்பு எண்ணிக்கை ரஷ்ய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. தகவல்களாக, 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து துப்பாக்கிதாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,  டெர்பென்ட்டில் இரண்டு பயங்கரவாதிகளும், மகச்சலாவில் மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும், தாகெஸ்தானின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு இந்த தாக்குதல்களை பயங்கரவாத செயல்கள் என சந்தேகப்பட்டு “பயங்கரவாத விசாரணையை” தொடங்கியுள்ளது.  ஜெப ஆலயம் தாக்குதலுக்குப் பிறகு தீப்பிடித்தது. ரஷ்யா டுடே வெளியிட்டுள்ள செய்தியின் படி, துப்பாக்கி ஏந்தியவர்கள் தீக்குண்டுகளை பயன்படுத்தி கட்டிடத்தை எரித்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாகெஸ்தான் பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஜி மெலிகோவ் கூறியதாவது “பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் எந்த காரணத்துக்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதனை விசாரித்து வருகிறோம்” என கூறியுள்ளார்.

Recent Posts

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

9 mins ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

48 mins ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

5 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

6 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

6 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

6 hours ago