Categories: Uncategory

பிஆர்பி நிறுவன சொத்துகள் கணக்கெடுப்பு.. 13 பேர் கொண்ட குழு அமைப்பு

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள பிஆர்பி நிறுவன சொத்துகளை கணக்கிட 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேட்டில் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் இரவு பகல் பாராது சம்மந்தப்பட்ட நபர்களிடம் முறையான விசாரணை நடத்தி தனது அறிக்கையை, 2015, நவ.23ல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிஆர்பி நிறுவனத்தின் கிரானைட் விற்பனை மற்றும் ஏற்றுமதி முறைகேடு குறித்த விசாரணையை மத்திய அமலாக்கத்துறையினர் துவக்கினர். விசாரணையில் பிஆர்பி நிறுவனம் முறைகேடாக ரூ.528 கோடி மதிப்புள்ள 1,625 அசையா சொத்துக்களை வாங்கியிருப்பதாகவும், வங்கியில் ரூ.32,57,275 நிரந்தர வைப்பு நிதியாக வைத்திருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

இந்த சொத்துக்கள் முறைகேடான பண பரிவர்த்தனையின் மூலம் வாங்கப்பட்டதாக, அமலாக்கத்துறை புகார் கூறியிருந்தது. இதனால் சொத்துக்கள் மற்றும் வங்கி வைப்பு நிதியை முடக்குவதாக தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள, பிஆர்பி நிறுவனத்தின் 1,625 வகையான சொத்துக்களை கையகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் உத்தரவின்பேரில் 13 பேர் கொண்ட குழு பிஆர்பி நிறுவன சொத்துகளை மதிப்பிட அமைக்கப்பட்டுள்ளது. பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனங்களின் சொத்துகளை கணக்கிடும் பணி மதுரை மாவட்டத்தில் இன்று தொடங்குகிறது.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

10 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

12 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

48 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago