நீரில் மூழ்கிய 22 வயதை நபரை உடனடியாக ஆற்றில் குதித்து 12 வயது சிறுவன் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான நபர் ஒருவர் பாலத்தில் இருந்து கோசி ஆற்றில் குதித்துள்ளார். அதனையடுத்து அந்த நபர் உதவிக்காக அழுத போது, அங்கிருந்த பலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
அந்த சமயத்தில் பாலத்தில் நண்பருடன் பேசி கொண்டிருந்த 12 வயதான சன்னி என்ற சிறுவன் அந்த நபர் அழுவதை கண்டு உடனடியாக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் நடு ஆற்றில் நீரோட்டத்தில் சிக்கி மயக்கத்தில் இருந்த அவரை சிறுவன் கரைக்கு கொண்டு சேர்க்க 15 நிமிடங்கள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ராம்நகர் காவல்நிலைய அதிகாரி ரவி சைனி கூறுகையில், சன்னி என்ற உடனடியாக குதித்து அந்த நபரை காப்பாற்றவில்லை என்றால் அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்றும், அந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். தன்னை விட இருமடங்கு பெரியவரை காப்பாற்றிய 12 வயது சிறுவனின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…