அதிமுகவில் இருந்து 12 பேரை நீக்கி ஈபிஎஸ் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பொறுப்புகள் வகிக்கும் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஈபிஎஸ் அறிக்கை.

இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கிருஷ்ணகிரி கிழக்கு, அரியலூர், திண்டுக்கல் மேற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம், சி.கோவிந்தராஜ், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த, விஜயபார்திபன், கண்ணகி குப்புசாமி, சுரேஷ்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சீனிராஜ், ராஜகோபால், கணேஷ்பாண்டியன், வினோபாஜி ஆகியோர் இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என அறிவித்துள்ளார்.

Leave a Comment