தமிழ்நாடு

பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம்..! அண்ணாமலை அறிவிப்பு.!

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பலர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.  ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கள்ளக்குறிச்சி வந்துள்ள நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கள்ளக்குறிச்சி வந்துள்ளார்.

அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நேரில் சென்று தங்கள் ஆறுதலை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், பாஜக சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னிடம் தொலைபேசியில் கேட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு மத்திய அரசு திட்டங்கள் விரைவாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, கள்ளச்சாராயம் என்றவுடன் ஏதோ ஒரு கிராமத்தில் நடைபெற்று இருக்கும் என மக்கள் நினைக்க வேண்டாம். இந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டது நகர்பகுதியில் தான். அந்த அளவுக்கு அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. கள்ளசாராயத்தால் ஒருவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அறிந்த உடன் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது.

ஆனால், மாவட்ட நிர்வாகம் தவறை மூடி மறைக்கிறது. அரசாங்கத்தின் வேலை அரசை பாதுகாப்பதாகவே இருக்கிறது. இதனை எதிர்த்து நாளை மறுநாள் பாஜக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தும். மதுவிலக்கு துறை என அதற்கு அமைச்சர் இருக்கிறார். அவரது வேலை டாஸ்மாக் வருமானத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது எனவும் பல்வேறு விமர்சனங்களை ஆளுங்கட்சி மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

Recent Posts

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி.! ஆட்சியை தக்கவைத்த I.N.D.I.A கூட்டணி.!

ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…

9 mins ago

பிசிசிஐ அளித்த ரூ.125 கோடி பரிசு தொகை ..! யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா ..?

பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை…

15 mins ago

மக்களே கவனம்! நாளை இந்த இடங்களில் எல்லாம் மின்தடை!!

மின்தடை  : நாளை ( ஜூலை 9 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடசென்னை  மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,…

49 mins ago

ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ! இபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு.!

சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…

52 mins ago

என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது…அபிஷேக் சர்மாவுக்கு அப்பா கூறிய அட்வைஸ்!!

அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…

2 hours ago

தமிழகத்தில் இவர்கள் மட்டும் இனி கட்டணமின்றி மண் எடுக்கலாம்.!

சென்னை : பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து வண்டல்மன் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள்…

2 hours ago