டெல்லியில் போலீஸ் போக்குவரத்து சாவடியில் கிளஸ்ட்டர் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று, வடக்கு டெல்லியில் உள்ள சராய் ரோஹில்லா பகுதியில் கிளஸ்ட்டர் பேருந்து ஒன்று போலீஸ் போக்குவரத்து சாவடியில் மோதியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 4 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாவது, இரவு 9 மணியளவில் கமல் டி-பாயிண்டில் ஒரு பேருந்து போலீஸ் போக்குவரத்து சாவடியில் மோதி, பின்னர் மரத்தில் மோதியது.
இதில் பொதுமக்களில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 4 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் பேருந்திலிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் இந்த ஓட்டுனரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சாராய் ரோஹில்லா காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…