முதலமைச்சர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும். கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர்.திரைப்படத்துறையிலேயே மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. யாருடைய கருவையோ எடுத்து வைத்துக்கொண்டு கரு அவர்களது உடல் எங்களுடையது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ரகசிய அரசியல் நடக்கும் காலத்தில், பாஜக நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.