வாழ்வாதார கோரிக்கையை வீடியோ மூலம் பதிவிட்டு அனுப்பிய மாணவியின் தேவையை நிறைவேற்றிய, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் செல்போனுக்கு, கடந்த 13-ம் தேதி வாட்ஸ் அப் மூலமாக ஒரு வீடியோ வந்தது. அதில் செய்யாறைச் சேர்ந்த பள்ளி மாணவி ரூபிகா, தனது அப்பா வேலையின்றி தவித்து வருவதாகவும், தங்களது வாழ்வாதார தேவைக்காக சொந்தமாக ஆடுகள் வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பெற்றோரின் மீது மாணவி கொண்ட பாசத்தைக் கண்டு, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை மாணவியின் வீட்டிற்கே சென்று வழங்கினார். மாணவியின் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர், அவர்கள் நிரந்தரமாக வசிக்க 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டி தரவும் ஏற்பாடு செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…