நஷ்டத்தை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “பேருந்துகள் கடும் இழப்பை சந்தித்துள்ளது. பேருந்துகள் மக்களுடையது, இதை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்ற மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவு என்று கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்றும் வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் பலர் இது குறித்து நியாயப்படுத்தி பேசி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

10 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

44 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

53 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

1 hour ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago