இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர், என்றும் சுயநிர்ணய உரிமை தேவை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரீடி ட்வீட் செய்துள்ளது பரபரப்பாகியுள்ளது.
அவர் தனது ட்விட்டரில், “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியினால் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை, விடுதலைக் குரல்களை ஒடுக்க காஷ்மீரில் அப்பாவிகள் பலியாகின்றனர். எங்கே சென்றது ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை?” என்று ட்வீட் செய்துள்ளார்.
காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் 13 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பிறகு ஷாகித் அப்ரீடியின் டிவீட் வெளியாகியுள்ளது. இதே சண்டையில் 3 ராணுவ வீரர்கள் 4 அப்பாவிப் பொதுமக்களும் பலியானார்கள்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் அடையாளம் காணப்பட்ட இருவர் ரயீஸ் அகமட் தோக்கர், இஷ்பாக் அகமட் மாலிக் ஆகியோர்களாவர். இவர்கள் இருவர் மே 2017-ல் ராணுவ அதிகாரி உமர் ஃபயாஸை அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியே காஷ்மீர் என்பதுதான் இந்தியத் தரப்பாகும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று கூறப்படுவது போல் இவரும் இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று ட்வீட் செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…