நயன்தாராவின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கோலமாவு கோகிலா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.
சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் அதிகாலை 6 மணி காட்சிகள் கூட திரையிட்டனர்., அப்படியிருக்க இப்படம் உலகம் முழுவதும் 40 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
ஒரு ஹீரோயின் சார்ந்த படம் 40 கோடி வரை வசூல் செய்வது தமிழகத்தில் இதுவே முதன் முறையாம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சமீபத்தில் வெளிவந்த இளம் நடிகர்களான ஆர்யா, ஜீவா ஆகிய நடிகர்கள் படங்களை விட இது அதிகமாம்.