மகிஷாசூரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள் அதனால் தான் துர்காதேவி அம்மனுக்கு மகிசாசூரமர்த்தினி என்ற பெயர் உண்டானது. அந்த அசுரனின் தங்கைதான் மகிஷி என்பவள். அவள் தன் சகோதரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி, தேவர்களையும், பூலோகத்தில் இருந்த முனிவர்களையும் துன்புறித்து வந்தாள். மேலும், மகிஷி, பிரம்மதேவனிடம் ஒரு சிக்கலான வரத்தைப் பெற்றிருந்தாள். அது, தனக்கு மரணம் நிகழ்ந்தால், அது ஈசனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழவேண்டும். அதுவும் அந்தக் குழந்தையின் 12 வயது கடக்கும்போது தான் தான் அழிக்கப்பட வேண்டும் என வரம் பெற்றாள்.
பந்தள மகாராஜா ராஜசேகரன், காட்டில் வேட்டையாடச் சென்றபோது, பம்பா நதிக்கரையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்தக் குழந்தைதான் ஐயப்பன். குழந்தையில்லாமல் ஏக்கத்தில் இருந்த பந்தளராஜன், அந்தக் குழந்தையை எடுத்து தன் மகனாக வளர்த்தான். ஐயப்பனின் கழுத்தில் மணி ஒன்று கிடந்ததால், ‘மணிகண்டன்’ என்று பெயரிட்டான்.
மகிஷி வதம் செய்யப்பட்டதும், அவளது அரக்க உருவம் மறைந்து அழகிய பெண்ணாக மாறினாள். பின்னர் ஐயனை அடையும் தன்னுடைய ஆவலை தெரிவித்தாள்.
ஆனால் ஐயப்பன், இந்த அவதாரத்தில் தான் ஏற்றிருக்கும் பிரம்மச்சரிய விரதத்தை எடுத்துரைத்து மறுத்துவிட்டார். ஆனால் தான் இருக்கும் இடத்தின் இடது பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மனாக வீற்றிருக்கும் வாய்ப்பை அவளுக்கு அளித்தார். பிறகு, தேவர்கள் அனைவரும் புலியாக மாறி, ஐயப்பனுடன் புறப்பட்டனர். புலிக்கூட்டம் ஊருக்குள் வருவதைக் கண்ட அனைவரும் பயந்து நடுங்கினர். ஐயப்பனின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர். ராணியும், மந்திரியும் இறைவனிடம் மன்னிப்பு வேண்டினர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…