Categories: இந்தியா

அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா ஆச்சர்யம் அளிக்கவில்லை..!

கடந்த சில நாட்களாகவே டெல்லி வட்டாரங்களில் தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பிலிருந்து அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியது. இப்போது தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பொறுப்பிலிருந்து விலகுவதாக அரவிந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டார்.
ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றதும், காலியாக இருந்த தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பில், அரவிந்த் சுப்ரமணியன் கடந்த 2014 அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், இன்னும் ஓராண்டு அப்பதவியில் இருப்பார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இப்போது பொறுப்பை ராஜினாமா செய்து உள்ளார். இதனை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லியும் உறுதிசெய்துள்ளார்.
இந்த நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கூறியிருப்பதாவது:- “ அரவிந்த் சுப்ரமணியனின் ராஜினாமா ஆச்சர்யம் தரவில்லை.
மோடி அரசின் மிகப்பெரும் மோசமான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக நிதி ஆலோசகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். நிதி ஆயோக் தலைவர் அரவிந்த் பனக்ரியா, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அரவிந்த் சுப்ரமணியனின் ராஜினாமா செய்தி வந்துள்ளதால், இது எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dinasuvadu desk

Recent Posts

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

4 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

25 mins ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

48 mins ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

1 hour ago

இன்னும் 4 போட்டி இருக்கு … பாத்துக்கலாம் ..- தோல்விக்கு பின் ருதுராஜ் !!

Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…

1 hour ago

பேனரை கிழிச்சது தப்பு தான்! மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!

Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…

1 hour ago