அடக்கொடுமையே..கணவரை காணவில்லை..னு..புகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவல்..! கையும்களவுமாக சிக்கியது எப்படி?

  • திருச்சி அருகே கணவரை காணவில்லை என்று ஒரு பெண் புகார் அளிக்க வந்துள்ளார்
  • புகார் அளிக்க வந்தவரை மயக்கி குடும்பம் நடத்தியாக தலைமைக்காவல் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் அருகே உள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சிராஜுநிஷா என்பவரின் தம்பி முகம்மது ஜக்ரியா இவர் ஒரு பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். சில தினத்திற்கு முன் மனைவியை கைவிட்டு வேற ஒரு பெண்ணுடன் அவர் தலைமறைவாகி விட்டதாக அக்கம்பக்கதினர் கூறுகின்றனர்.

காதல் திருமணம் நடைபெற்றதால் அப்பெண்ணுடன் சிராஜுநிஷாவுக்கு எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தம்பியைக் காணவில்லை என்று சிராஜுநிஷாவும்,தன் கணவரைக் காணவில்லை என்று காதல் திருமணம் செய்து கொண்ட அப்பெண்ணும் தனித்தனியாக புலிவலம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இவர்களின் குடும்ப பிரச்சனையை விசாரித்து வந்த புலிவலம் காவல்நிலைய தலைமைக் காவலர் ராமருக்கு  எப்படியோ சகோதரனின் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நெருக்கத்தை அறிந்த சிராஜுநிஷா காவலருக்கும் அந்த பெண்ணுக்குமான நெருக்கத்தை அறிந்து கொண்டு அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க காத்திருந்தார்.

சனிக்கிழமை நள்ளிரவில் அப்பெண்ணின் வீட்டு வாசலில் ராமரின் இருசக்கர வாகனம் ஒன்று நிற்பதை கவனித்த சிராஜுநிஷா தாமதிக்காமல் அந்த வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டார் அங்கு வந்த உறவினர்கள் முன்னிலையில் வீட்டின் கதவைத் திறந்துள்ளனர்.உள்ளே இருந்த கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர்.இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.இந்த தகவலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் தலைமைக் காவலர் ராமரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். காவல் நிலையத்திற்கு கணவரைக் காணவில்லை என புகார் அளிக்க வந்த பெண்ணிண் கணவன் போலவே மாற எண்ணிய தலைமைகாவலர் செயலை பொதுமக்கள் விமர்சிக்கின்றனர்.

kavitha

Recent Posts

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

18 mins ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

20 mins ago

கட்டப்பா எதற்கு துரோகி ஆனார்? விரிவான விவரத்துடன் பாகுபலி : Crown of Blood!

Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…

29 mins ago

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

50 mins ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

1 hour ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

1 hour ago