ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி!

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய சம்பவம் ஒரு பக்கம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் சிரஞ்சீவி, ராதா ரவி, ஆகியோர் பேசிய பழைய வீடியோக்களை வெளியீட்டு நெட்டிசன்கள் இவர்கள் பேசியது எல்லாம் சரியா? இவர்கள் நடந்து கொண்ட விதம் சரியா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்!

அந்த வகையில், ராதா ரவி முன்னதாக ஐஸ்வர்யா ராயை பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்றை பாடகி சின்மயி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ராதா ரவி ” எனக்கு சரியாக ஹிந்தி மொழி தெரியாது எனக்கு தெரிஞ்ச மொழி தமிழ் மட்டும் தான். எனக்கு மட்டும் ஹிந்தி தெரிந்திருந்தால் பாலிவுட் சென்று நடிகை ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன்.

அதற்காக இப்படி சொல்கிறேன் என்றால் எனக்கு படங்களில் நடிக்க அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத் தான் கொடுக்கிறார்கள். எனவே, எனக்கு என்ன கடவுள் வேடமா கொடுக்குறாங்க” என சிரித்துக்கொண்டே பேசினார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சின்மயி ‘இதோ தமிழில் உள்ள இந்த வீடியோவில், இது ஒரு பெரிய ஜோக் என்று மக்கள் சிரிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

த்ரிஷா நல்ல நடிகை! நான் ஒன்னும் தண்ணி அடிச்சிட்டு பீச்சுல ஆடல..மன்சூர் அலிகான் பரபரப்பு!

தமிழ்நாட்டின் சில திரைப்பட சங்கங்களில் முக்கியமான அதிகாரியாக இருக்கிறார்.”இந்தி கத்துகிட்டு இருந்தா ஐஸ்வர்யா ராய் கெடுப்பேன் ” என்று அவர் கூறுகிறார். மன்சூர் அலிகான் சொன்னதைத்தான் ராதாரவியும் சொன்னார்.இந்த மனிதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று யாரும் ஏன் கருதவில்லை என்பதை நான் உண்மையில் அறிய விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இதைப்போல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மன்சூர் அலிகான் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவர் கீர்த்தி சுரேஷ் கையை பிடித்து கொண்டு நடந்து கொண்ட விதம் அதைப்போல பூஜாஹெக்டேவுடன் ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பற்றியும் நெட்டிசன்கள் விமர்சித்து கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.