சூப்பர் ஸ்டாரின் மகளின் வீட்டில் என்ன விசேஷம் தெரியுமா.!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் 1,2,3,4 என்று கடந்து இன்று எங்கள் மகனுக்கு 5 வயதாகிறது என்று ட்வீட் செய்துள்ளார். 

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் முதலில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியவர். அதனையடுத்து 2010ல் கோவா படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார். அதனையடுத்து 2014ல் தனது தந்தையை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கி இயக்குநரானார். 2010ல் அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார் . ஆனால் 2016ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். அதனையடுத்து தான் நடிகரான விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். வழக்கமாக வேத்துடன் விசாகன் இணைந்துள்ள புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் தனது மகனின் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

அதில் 1,2,3,4 என்று கடந்து இன்று எங்கள் மகனுக்கு 5 வயதாகிறது. பிறந்தநாளில் மட்டுமில்லாமல் அவனை தினமும் கொண்டாடி வருவதாகவும், கடவுள் எங்கள் தேவதையை ஆசீர்வதிப்பார் என்றும் பதிவிட்டுள்ளார். அதனுடன் வேத் கேக் வெட்டும் புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது பலர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

7 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

41 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

50 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

58 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago