#Breaking:தொடங்கியது…உ.பி. இறுதி கட்ட தேர்தல்!

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.அதன்படி,உ.பி-யில் ஏற்கனவே 6 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி,பிரதமர் மோடியின் வாரணாசி,ஜான்பூர்,காசிப்பூர் உள்ளிட்ட 54 தொகுதிகளில் இந்த தேர்தல் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியுள்ளது.மேகும்,9 மாவட்டங்களில் 23,000-க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

இறுதி கட்ட தேர்தல் மாலை 6 மணி வரை நடைபெறும் நிலையில், 2.10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.இதனைத் தொடர்ந்து,வருகின்ற 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.