இரண்டாவது டெஸ்ட் போட்டி… வெற்றி பெற்றது இங்கிலாந்து… உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..

  • இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடந்து வந்தது.
  • இந்த, தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது  டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் நடந்தது.இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.பின் இரண்டாவதாக களமிறங்கிய  தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது  இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி  இரண்டாவது ஆட்டத்தில் 391 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இலக்காக 438 ரன்கள்  நிர்ணயிக்கப்பட்டது. பின்  களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிதானமாக ஆடி, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே  எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 5-வது நாள் மற்றும்  இறுதி ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டத்தை டிரா செய்ய கடுமையாக  விளையாடியது. இந்த அணி ரன்களைக் குவிப்பதில் கவனம் செலுத்தாமல் விக்கெட்டைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியது. எனவே ஆட்டம் டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட  இந்த ஆட்டம் , கடைசி நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால்,தென் ஆப்பிரிக்க அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் இந்த இரண்டாவது டெஸ்டை வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. சமனில் முடிந்த இந்த  போட்டி கிரிகெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Kaliraj

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

16 seconds ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

5 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

5 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

5 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

6 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

6 hours ago