வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு செய்தி அனுப்ப எளிமையாக இருக்கும் வகையில் ‘யுசர் நேம்’ (User Name) என்கிற அம்சத்தை மேம்படுத்தி வருகிறது. இந்த யூசர் நேம் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் மொபைல் நம்பரை மற்றவருக்கு பகிராமல் ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பும் அம்சத்தை உருவாக்கி வருகிறது.
இந்த அம்சம் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் உள்ளது. குறிப்பாக இதே போன்று மொபைல் நம்பரை பகிராமல் வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் அம்சம் எக்ஸ்-ல் (ட்விட்டர்) உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக பீட்டா வெர்ஷன் 2.23.25.19 -இல் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் யூசர் நேம் பயன்படுத்தி மற்றவர்களுக்கு மெசேஜ் செய்து கொள்ளலாம். உங்களுடைய மொபைல் எண் அவர்களுக்கு காட்டப்படாது. இதனால் உங்களின் பாதுகாப்பு என்பது மேம்படுத்தப்படும். இந்த அம்சம் தற்பொழுது ஆண்ட்ராய்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படவில்லை. விரைவில் இந்த அம்சம் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மெட்டா நிறுவனம் அதன் தயாரிப்புகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகிறது. அதன் முயற்சியாக இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.
முன்னதாக, சாட் லாக் (Chat Lock), வியூ ஒன்ஸ் (View Once) என்கிற பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதோடு உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எச்டியில் அனுப்பும் அம்சமும் அறிமுகமானது. ஆனால் இந்த அம்சம் ஐஓஎஸ் பயனர்களுக்கு பீட்டா வெர்சனில் மட்டுமே கிடைத்தது.
இப்போது இந்த அம்சம் ஐஓஎஸ் பயனர்களுக்காக வெளிட்டபட்டுள்ளது. இதனை பயனர்கள் iOS 23.24.73 என்கிற வாட்ஸ்அப் வெர்சனை பதிவிறக்கம் செய்து பெறலாம்.
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…