இபிஎஸ் உடன் பேசியது என்ன? – தமிமுன் அன்சாரி பதில்!

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்திப்பு நடந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்திருந்த நிலையில், தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இபிஎஸ்-ஐ தமிமுன் அன்சாரி சந்தித்து பேசியிருப்பது, கூட்டணி தொடர்பாக இருக்கும் என கூறப்படுகிறது .

இந்த சந்திப்பின்போது, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி,  20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க குரல் கொடுக்குமாறு வலியுறுத்தினேன்.

இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறோம். அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளோம்.  இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாஜக கூட்டணியை அதிமுக முறித்தது துணிச்சலான முடிவு என இபிஎஸ்-யிடம் தெரிவித்தேன்.

பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறியது ஒரு நல்ல செய்தி, இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பரில் முடிவு செய்யப்படும். சிறைவாசிகள் விடுதலை தொடர்பாகவே இபிஎஸ் உடன் சந்திப்பு தவிர கூட்டணி தொடர்பாக அல்ல என விளக்கமளித்தார். எனவே, இந்த சந்திப்பு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரை செல்லுமா? என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

27 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

31 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

49 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

52 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

52 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago