தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன ? கனிமொழி கேள்வி

தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன ? என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு மின்சார வாரியம் , புதிய கட்டடங்கள் கட்டும்போது, மின் இணைப்பு பெற கட்டட கட்டுமான நிறைவு சான்று அவசியம் என்று ஆணை பிறப்பித்தது.ஆனால் தமிழக அரசு இந்த ஆணையை சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில்  திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், கட்டுமான பணி நிறைவு சான்று’ இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது என்ற ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன ? இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை ? ஆட்சி முடிய இன்னும் ஆறே மாதங்கள் இருப்பதால் அதற்குள் வசூலை அதிகரிக்கும் பொருட்டா ? நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.