தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வாஷிங் மெஷின், ஆன்ராய்டு மொபைல் பரிசு…!

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மெஷின், ஆன்ராய்டு மொபைல் போன்றவை குழுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பல இடங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 அந்த வகையில், மதுரை மாநகராட்சியில், 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வண்ணம், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மெஷின், ஆன்ராய்டு மொபைல் போன்றவை குழுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.