ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்க கிராமமக்கள் கடும் எதிர்ப்பு.!

  • பின்னர் வாக்கு எண்ணிக்கையான கடந்த 2-ம்தேதி  ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து அடுத்த மறுநாள் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும்.

கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமி  என்பவரும் , பூட்டு சாவி சின்னத்தில் விஜயலட்சுமி என்பவரும் போட்டியிட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கையான கடந்த 2-ம்தேதி  ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்த மறுநாள் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  இதனால் ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனாலும் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

இந்நிலையில் ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று குமளங்குளத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெயரில் ஏற்பட்ட குளறுபடியால் விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பதவிக்கான பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டார்கள். இதையெடுத்து நேற்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்த பதிவியேற்பு விழாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து பதவி ஏற்பு விழா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இங்கு இருந்து கலைந்து செல்லுங்கள் என போலீசார் கூறினர்.ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லையேன்றால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை , ரே‌ஷன் கார்டு மற்றும் அரசு ஆவணங்கள் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என கூறினர்.

 

Recent Posts

சிசிடிவியை பார்த்தால் உண்மை தெரியும்… ஸ்வாதி மாலிவால் பரபரப்பு.!

சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…

3 mins ago

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

33 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

37 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

55 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

58 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

58 mins ago