Vande Bharat train [Image source : File image]
முதலில் வந்தே பாரத் ரயிலின் வெளிப்புறத் தோற்றத்திற்கு நீலமும்-வெள்ளையும் கலந்த இருந்து நிலையில், இப்போது புதிய நிறமாக ஆரஞ்சு சேர்த்துள்ளது ரயில்வே நிர்வாகம். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்த விளக்கம் கேட்கையில், வெள்ளை நிறத்தால் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. நேற்று, சென்னை ICFல் உள்ள ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.
புதிய ஆரஞ்சு நிற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இங்குள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் மேம்பாடுகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பிறகு, ரயில்வே அமைச்சர் செய்தியாளர் சந்தித்து பேசினார், அப்போது அவரிடம் காவி நிறம் ஏன் என்று கேட்டபோது, இது மேக் இன் இந்தியா என்ற கருத்தாக்கமாகும், ‘தேசியக் கொடியில் காவி நிறம் உள்ளதால் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த நிறத்தை தேர்வு செய்தோம்’ என்றார்.
இது இந்தியாவில் எங்கள் சொந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பொது, வந்தே பாரத் ரயில்களில் 25 முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார். சோதனை ஓட்டமாக 28வது ரேக்கின் நிறம் மாற்றப்படுகிறது என்றார்.
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவர் மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு பாரத் ரத்னா விருது வழங்க…
சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரேடியோகிராபர்,…
பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை…
வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய 'வணங்கான்' படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண்…
விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம்…
Lizard- பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு தான் அதிகம் பயம் இருக்கும். இதனால்…