உலகளவில் இத்தாலியில் தான் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருந்து வந்தது. தற்போது அமெரிக்கா அதை முந்தி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் முதலிடம் வந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றது. இதனால் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரசால் உலகளவில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 17,81,383 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,08,880 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட 4,04,581 பேர் குணமடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், உலகளவில் இத்தாலியில் தான் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருந்து வந்தது. தற்போது அமெரிக்கா அதை முந்தி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் முதலிடம் வந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,580 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 533,115 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் கொரோனா உயிரிழப்பை பதிவு செய்து உள்ளன. கொரோனா வைரஸிலிருந்து உயிரிழப்பை அறிவிக்காத ஒரே மாநிலம் வயோமிங் என்று கூறப்படுகிறது. தனிநபர்களின் இறப்புகள் இத்தாலியை விட குறைவாகவே அமெரிக்காவில் இருந்தன. ஆனால் கடந்த 2 நாட்களில் இத்தாலியை விட அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19468 ஆக உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…