40 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகள் பெற்று வெல்ல வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பதிலாக, நடிகர் அரவிந்த் சாமியின் படத்தை போட்டு போஸ்டர் அடிக்கும் நிலையில் தான் இன்றைய அதிமுக உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் நடந்த திமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசும் போது, “ஆளும்கட்சியாக பொறுப்புக்கு வந்த பின்னர் சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் இது. 2024 தேர்தல் முடிவுகள் 2026 தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும். எனவே 40 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர் படத்திற்கு பதிலாக, நடிகர் அரவிந்த் சாமியின் படத்தை போட்டு போஸ்டர் அடிக்கும் நிலையில் தான் இன்றைய அதிமுக உள்ளது.

பொதுத் தேர்வு..! தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு

சேலத்தில் திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டி உள்ளோம். வாழும் பெரியார், இளைய கலைஞர், சின்னவர் என என்னை அழைப்பதில் உடன்பாடில்லை. நான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை, கைதட்டினால் மட்டும் போதாது கைகோர்த்து செயல்பட வேண்டும் ஒவ்வொரு மண்டலத்திலும் கட்சியின் பாகநிலை முகவர்கள் கூட்டம் நடைபெறும், இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுகவில் துவங்கி உள்ளோம்” என்றார்.

Leave a Comment