பாகிஸ்தானில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவான ஐஎஸ்பிஆர், நேற்று இரவு பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினர் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளது.

இதன்பிறகு, பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் மீட்கப்பட்டுள்ளது.