சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய்.
தற்போது அதே போல மீண்டும் இந்தாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கும் விழாவை விஜய் ஏற்பாடு செய்துள்ளார். கடந்த முறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த விழாவானது இம்முறை விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை தவெக கட்சி தலைவராக நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்க உள்ளார்.
இந்த விழா இம்முறை இன்று (ஜூன் 28) மற்றும் ஜூலை 3 என இரண்டு கட்டங்களாக விழா நடைபெற உள்ளது. இன்று 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கப்பட உள்ளது. இந்த விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த விழா காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், விழா நடைபெறும் இடத்திற்கு அதிகாலையிலேயே தவெக தலைவர் விஜய் வந்துவிட்டார். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விழாவை விரைவாக ஆரம்பித்து நிறைவு செய்யவும் விஜய் சீக்கிரமாக வந்துள்ளார் என கூறப்படுகிறது.
விழா ஆரம்பித்த உடன் 10 நிமிடங்கள் விஜய் மாணவர்கள் மத்தியில் பேச உள்ளார். விழாவில் கலந்துகொள்ளும் நபர்கள் செல்போன் கொண்டு செல்ல கூடாது என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அவர்கள் குடும்பத்தினரை மட்டுமே உடன் அழைத்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…
புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…
நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…
மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…