ரயிலை பயணத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள் !காரணம் என்ன ?

அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரயிலில் பயணிக்க மக்கள் தொடங்கியுள்ளனர்.
பேருந்துக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளைவிட ரயில்களில் பயணம் செய்தால் பணம் மிச்சமாகும் எனக் கருதி, முடிந்தவரை ரயில்பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இதனால், கடந்த சில நாட்களாக புறநகர் ரயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.இதேபோன்று, சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
பேருந்துக் கட்டணங்களை ஒப்பிடுகையில், ரயில் கட்டணம் பெரும்பாலும் குறைவாகவே உள்ளது.சென்னையில் இருந்து திருச்சிக்கு அல்ட்ரா டீலக்ஸ் ரக பேருந்தில் 372 ரூபாயும், விரைவு ரயிலில் 2ஆம் வகுப்பு கட்டணம் 115 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து கோவைக்கு 571 ரூபாய் பேருந்துக் கட்டணம் உள்ள நிலையில், ரயில் கட்டணம் 150 ரூபாயாக உள்ளது. அதேபோன்று சென்னையில் இருந்து மதுரைக்கு பேருந்துக் கட்டணம், 515 ரூபாயும், 2ஆம் வகுப்பு ரயில் கட்டணம் 150 ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சென்னையிலிருந்து, திருநெல்வேலி செல்பவர்களுக்கு பேருந்து கட்டணம் 695 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2ஆம் வகுப்பு ரயில் கட்டணம் 185 ரூபாயாகவும், ராமேஸ்வரம் செல்வதற்கு பேருந்தில் 650 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் வேளையில் 2ஆம் வகுப்பு ரயில் கட்டணம் 175 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Recent Posts

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

1 hour ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

8 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

14 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

14 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

15 hours ago