ஈரோடு கிழக்கு உட்பட மொத்தம் 6 இடைத்தேர்தல் முடிவுகள்… 3 மாநில தேர்தல் முடிவுகள்.. இன்னும் சற்று நேரத்தில்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் உட்பட 3 மாநில சட்டமன்ற தேர்தல், 6 மாநிலங்களில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைந்த பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்று இந்து தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. காங்கிரஸ் – அதிமுக வேட்பாளர்கள் இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

3 மாநில தேர்தல் : அதே போல, திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெபெற்று முடிந்து இன்று முடிவுகள் வெளியாக உள்ளது. அந்தந்த மாநிலங்களை எந்த கட்சி ஆளப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இடைத்தேர்தல்கள் : அடுத்து, ஈரோடு கிழக்கை போல மற்ற மாநில இடைத்தேர்தல்களான, லட்சத்தீவுவில் ஒரு மக்களவை தொகுதி உறுப்பினர் மறைவை அடுத்து அங்கும், இடைத்தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அடுத்து,அருணாச்சல பிரதேசத்தில் லும்லா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மரணமமடைந்ததை அடுத்து, அங்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மேற்கு வங்காளம் மாநிலத்தின் சாகர்திகி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கஸ்பா பெத் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் முடிந்து இன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதே போல அம்மாநிலத்தில் இன்னொரு தொகுதியான சின்ச்வாட் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

Leave a Comment