சென்னையில் குடிநீர் தட்டுப்படை குறைக்க தமிழக அரசு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த துவங்கியது. சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெம்மேலி பகுதியில் இந்த திட்டம் உருவாக்கம் செய்யப்பட்டது. வடசென்னை மக்களின் குடிநீர் தட்டுப்படை குறைக்கும் இந்த திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
நெம்மேலியில் நிறைவுபெற்ற கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனுடன் மேலும் முடிவுற்ற 95 திட்டங்களையும் காணொளி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இன்று முதல்வர் தொடங்கி வைத்த நெம்மேலி கடல்நீர், குடிநீராக்கும் திட்டம் உட்பட மொத்தம் 2465 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். இது போக 1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 39 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசுகையில், நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் வடசென்னை பகுதி மக்கள் 10 லட்சம் பேர் பயன்பெறுவர் என்றும், இதுவரை சென்னை மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும், அதிகப்படியான நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. கடும் நெருக்கடியில் ரூ.100 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மாநகராட்சி, நகராட்சிகளில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அப்பணிகளை பட்டியலிட இந்த ஒரு நாள் போதாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…