இதை தான் என் கடைசி ஆயுதமாக பயன்படுத்துகிறேன் – டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு வீடியோ அனுப்பிய காவலர்..!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு வீடியோ வெளியிட்ட தமிழக காவலர். 

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை பார்த்து குறைகளை களைய முயன்ற காவலருக்கு, டிஜிபியை நேரில் பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தான் 2016-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இணைந்ததாகவும், தன்னுடைய குறைகளை கூற, டிஜிபி முகாம் அலுவலகத்திற்கு பலமுறை  வந்ததாகவும், ஆனால்,அலுவலர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சந்திக்க அனுமதிப்பதில்லை. எனவே, இந்த வீடியோவை எனது கடைசி ஆயுதமாக பயன்படுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறை என்பது ஒரு குடும்பம் போல, எனவே எனது குடும்பத்தில் இருக்கும் விஷயங்களை காவல்துறையின் தந்தையாகிய உங்களிடமே கூற ஆசைப்படுகிறேன். எனவே, டிஜிபி ஐயா அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment