தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென்று எழுந்து அழுத பெண்…! அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…!

தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென்று எழுந்து அழுத பெண். 

மத்தியபிரதேசம், பரமத்தியில் உள்ள, முடலே என்ற கிராமத்தில் உள்ள சகுந்தலா கெய்க்வாட் என்ற 76 வயது பெண்மணிக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது வீட்டின் தனிமை படுத்தப்பட்டார். ஆனால் அவரது நிலைமை மோசமடைந்ததையடுத்து குடும்பத்தினர் அவரை பரமத்தியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 அப்பெண் தனியார் வாகனத்தின் மூலம் பரமத்தியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்பதாகவே. காரில் காத்திருந்த போது அவர் மயக்கமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து அசைவுகள்  இல்லாததால், இறந்துவிட்டதாக கூறி அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதனை அடுத்து, அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று தகனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அவரது இறுதி சடங்கிற்கு உறவுகள் வருவார்கள் என்பதால் குளிர் சாதனப்பெட்டியில் அவரை வைத்து இருந்துள்ளனர். அப்போது திடீரென்று அந்தப் பெண் எழுந்து அழ ஆரம்பித்துள்ளார். அதன் பின் கண்களைத் திறந்து பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் பரமதியின் முடலே கிராமத்தில் நடந்திருப்பதை போலீஸ் அதிகாரி,  சந்தோஷ் கெய்க்வாட் உறுதிப்படுத்தினார். அவர் மேலதிக சிகிச்சைக்காக, அங்குள்ள கோல்டன் ஜூப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சதானந்த் காலே தெரிவித்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

9 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

39 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

43 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

1 hour ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

1 hour ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

2 hours ago