பங்குச்சந்தை

3-வது நாளாக தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் பங்குச்சந்தை ..! தற்போதையே நிலவரம் இதோ ..!!

பங்குச்சந்தை: இந்த வாரம் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்றே வருகிறது.

இந்திய அரசியலில், சிறு மாற்றம் ஏற்பட்டதிலிருந்தே இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்று வருகிறது. அதிலும், கடந்த வாரம் ஒரு சில நாட்கள் பங்குச்சந்தைகள் குறைந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே, அதாவது கடந்த 2 நாட்களாக புதிய உச்சத்தை கண்டுள்ளது. மேலும், இன்றைய நாளிலும் தொடர்ந்து 3-வது இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 சரிவை காணாமல் உச்சம் கண்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நேற்றைய நாளான செவ்வாய்க்கிழமை வர்த்தக நாளின் முடிவில் மும்பை பங்குச்சந்தை (BSE) குறியீடான சென்செக்ஸ் 308.37 புள்ளிகள் உயர்ந்து 77,301.14 புள்ளியிலும், நேஷனல் பங்கு சந்தை (NSE) குறியீடான நிஃப்டி 9230 புள்ளிகள் உயர்ந்து 23,557.90 புள்ளியிலும் முடிவடைந்தன. அதன்பின் இன்று காலை ஆசிய பங்கு சந்தையின் ஏற்றம் காரணமாக தேசிய பங்கு சந்தை (NSE) நிப்ஃடி 30.35 புள்ளிகள் உயர்ந்து 23,558.25 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 102.02 புள்ளிகள் உயர்ந்து 77,403.16 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகம் தொடங்கியது.

அதன்பிறகு சில இறக்கங்களை கண்டு நிலையில் சென்செக்ஸ் 118.65 புள்ளிகள் உயர்ந்து 77,419.79 புள்ளிகளில் வர்த்தகம் தற்போது நடைபெற்று வருகிறது. அதே போல தற்போது சற்று ஏற்ற இறக்கத்தை கண்ட நிப்ஃடி 17.50 புள்ளிகள் சரிவை கண்டு 23,540.30 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் நிறுவனம், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்கள் பங்குகள் எல்லாம் அதிக லாபம் எட்டியுள்ளன. அதே நேரம் டைட்டன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனத்தின் பங்குகள் எல்லாம் நட்டத்தை சந்தித்து வருகின்றன.

Recent Posts

‘வெற்றியை கொண்டாட எங்களுடன் சேருங்கள்’- ஜெய்ஷா டிவீட் ..!

பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக…

15 hours ago

கங்கானாவை அறைந்த பெண் காவலருக்கு பெங்களூருக்கு பணிமாற்றமா.? CISF புது விளக்கம்.!

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில்…

15 hours ago

கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்?

சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த…

15 hours ago

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.? ஏற்பாடுகள் தீவிரம்…

ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என…

15 hours ago

நாகப்பாம்பு வாயில் சிக்கிய மருந்து பாட்டில்! வைரல் வீடியோ…

ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின்…

15 hours ago

சிறுவனை தாக்கிய தெருநாய்கள் ..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!!

தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில்…

16 hours ago