ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 1,031 புள்ளிகள் உயர்வு..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 1,031 புள்ளிகள் அதிகரித்து 58,991 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,359 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 57,572 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 1,031 புள்ளிகள் அல்லது 1.78% என அதிகரித்து 58,991 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 279.05 புள்ளிகள் அல்லது 1.63% அதிகரித்து 17,359 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸுகி இந்தியா, டைட்டன் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Leave a Comment