ஆசிய சந்தைகளும் ஏற்ற, இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இந்திய சந்தைகள் இன்று மீண்டும் வரலாற்றில் உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 518.22 (0.88%) புள்ளிகள் உயர்ந்து, 59,659.38 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 141.55 (0.80%) புள்ளிகள் உயர்ந்து, 17,771.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
டாடா ஸ்டீல் நிறுவனம் எதிர்பார்க்காத வகையில் 3.22 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பஜாஜ் பின்சர்வ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும் இன்று அதிகப்படியாக 3.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு தொடர்ந்து லாபத்தினை கொடுத்து வருகின்றது. உலகளாவிய சந்தையானது சற்று சரிவில் இருந்தாலும், ஆசிய சந்தைகளும் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இந்திய சந்தைகள் இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.
இதனிடையே, ஏற்றத்துடன் தொடங்கிய ப்ரீ ஓபனிங் சந்தையில் தொடக்கத்திலும் சென்செக்ஸ் 281.23 புள்ளிகள் அதிகரித்து, 59,422.39 புள்ளிகளாகவும், நிஃப்டி 79.70 புள்ளிகள் அதிகரித்து, 17,709.20 புள்ளிகளாகவும் இருந்தது. இம்மாத இறுதிக்குள் 60,000 புள்ளிகளை தொடலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…