Union Minister L Murugan [File Image]
டெல்லி: புதிய நாடாளுமன்றம் துவக்க நாளின் போது பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இந்த செங்கோல் குறித்து சமாஜ்வாடி எம்பி ஆர்.கே.சவுத்ரி கூறுகையில், மக்களவையில் செங்கோல் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது என்ன மன்னராட்சியா.? ஜனநாயக ஆட்சியில் செங்கோலை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அரசியல் சாசன புத்தகத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார்.
செங்கோல் குறித்து பல்வேறு உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.சவுத்ரிக்கு தமிழ் கலாச்சாரம் பற்றி தெரியாது. அவருக்கு தமிழ் பாரம்பரியம் தெரியாது. அவருக்கு தமிழ் செங்கோலின் மதிப்பு தெரியாது.
செங்கோல் அனைவருக்கும் சமநீதியை பிரதிபலிக்கிறது. செங்கோல் நியாயமான அரசாங்கத்தை பிரதிபலிக்கிறது. நமது பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் செங்கோலை மக்களுக்கு அடையாளம் காட்டி புதிய நாடாளுமன்றத்தில் நிறுவினார். புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. I.N.D.I.A கூட்டணி மக்களின் செங்கோலை மதிப்பதில்லை. செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார்.
இங்கிலாந்து: தேர்தல் கருத்து கணிப்புகளின்படி இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம் உருவாகி தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 1997 முதல்…
இசை வெளியீட்டு விழா : நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் "ராயன்" படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.…
சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஸ் உட்பட 8 பேரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சேலம்…
பிரான்ஸ் : தென்மேற்கு பிரான்சில் உள்ள ரோகமடோர் என்ற நகரத்தில் 1,300 ஆண்டுகளாக பாறையில் சிக்கியிருந்த ஒரு பழங்கால வாள் மர்மமான முறையில் காணாமல் போனதாக நியூயார்க்…
மும்பை : கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று வாசாயில் உள்ள துங்கரேஷ்வர் கல்லியில், 32 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய ஈடுபட்ட கொடூரனை அங்குள்ள தெரு…
ஜார்கண்ட்: மீண்டும் ஆட்சியமைக்க இன்னும் சற்று நேரத்தில் ஹேமந்த் சோரன் I.N.D.I.A கூட்டணி தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நிலமோசடி புகாரில் சட்டவிரோத…