ஓபிஎஸ் மேல்முறையீடு நாளை விசாரணை.! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.!

ஓபிஎஸ் மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு . 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ரத்து செய்வது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

ஓபிஎஸ் மனு தள்ளுபடி :

இந்த வழக்கு விசாரணை ஒற்றை நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன் நடைபெற்று, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதியாமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மேல்முறையீடு :

இந்த ஒற்றை நிதிமன்ற தீர்ப்பை எதிர்த்து , அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட கூடாது என்று கூறியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு இன்று விசாரிக்கப்படும் என பட்டியலிடப்பட்டு இருந்தது.

ஓபிஎஸ் கோரிக்கை :

இந்நிலையில், நேற்று தான்தீர்ப்பு வெளியாகியள்ளது என்ற காரணத்தால் , உடனடியாக அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாதா காரணத்தால், மின்னணு ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டு இருந்தது.

இபிஎஸ் கேவியேட் மனு :

இதனை ஏற்று, சென்னை உயர்நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு நாளை ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என கூறியுள்ளது. இதற்கிடையில் இந்த மேல்முறையீடு வழக்கு தொடர்பாக கேவியேட் மனுவை இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment