தமிழ்நாடு

கடந்த முறை ரூ.5 லட்சம்., இம்முறை ரூ.7 லட்சம்.! அமைச்சர் உதயநிதியின் அசத்தல் அறிவிப்புகள்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி (வியாழன்) அன்று துவங்கி துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் பற்றிய கேள்விநேரம், விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அந்தந்த துறை அமைச்சர்கள் தங்கள் துறைகள் பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இன்று விளையாட்டுத்துறை சார்பில் பேசிய அத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக விளையாட்டு துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட , செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு அறிவிப்புகளை குறிப்பிட்டார். அதில், கடந்த முறை ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கு அப்போது சிறப்பு ஊக்க தொகையாக 5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த முறை, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முறை சிறப்பு ஊக்கத்தொகை 7 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், 2 கோடி ரூபாய் செலவீட்டில் சர்வதேச செஸ் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன.  இதனால் தமிழக வீரர் குகேஷ் இளம் வயதில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டார். மாநில, தேசிய, சர்வதேச அளவில் சாதிக்கும் வீரர்களுக்கு அரசுத்துறை, அரசு பொதுத்துறையில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் 7 வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் 10 கோடி ரூபாய் செலவில் சென்னை ராதாகிருஷ்ணன் உள்ளரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா சென்னையில் நடத்த 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டது. தமிழகம் முழுக்க 355 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 9 சட்டமன்ற தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவையில் பன்னாட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என முதலைச்சர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்காக தற்போது இடம் பார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்தாண்டுக்குள் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்.

Recent Posts

பிரிட்டன் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்திய வம்சாவளியினர்…

UK தேர்தல்:  பிரிட்டன் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி 7 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். 650 இடங்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று…

44 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல் ..ஸ்ருதியின் அம்மாவால் தெரியவரும் உண்மைகள்..!

சிறகடிக்க ஆசை இன்று -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூலை 5] கதைக்களத்தை இங்கே காணலாம். ரவியும் ஸ்ருதியும் கேக்கோட வீட்டுக்குள்ள…

58 mins ago

முந்துங்கள் வருங்கால வங்கி ஊழியர்களே …! UCO வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ..!

UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 544…

1 hour ago

நல்லா நோட் பண்ணிக்கோங்க மக்களே! நாளை இந்த இடங்களில் மின்தடை!

மின்தடை  : நாளை ( ஜூலை 6 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். தென் சென்னை - ஐய்யப்பன்தாங்கல் காட்டுப்பாக்கம்,…

2 hours ago

எடப்பாடி பழனிச்சாமி ஓர் நம்பிக்கை துரோகி.? அண்ணாமலை கடும் தாக்கு.!

விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு பொருத்தமாக இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.. இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

2 hours ago

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் 'குபேரா' படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.…

2 hours ago