1989 முதல் சிக்கலில் அரசாங்க சொத்து.! 110 கிரவுண்ட் நிலம் யாருக்கு சொந்தம்.? உயர்நீதிமன்றம் உத்தரவு.! 

சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே உள்ள 110 கிரவுண்ட் நிலமானது அரசுக்கு சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. 

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, உள்ள 110 கிரவுண்ட் நிலமானது தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலமானது அரசுக்கு சொந்தம் என அதனை அரசு மீட்க தொடர் நடவடிக்கையை 1989ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தது.

தோட்டக்கலை சங்கம் : இதில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அரசு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன் பிறகு, தனி ஒருவர் உத்தரவின் பெயரில் நிலத்தை மீட்க கூடாது என தோட்டக்கலை சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

செம்மொழி பூங்கா : இந்த வழக்கு உத்தரவில் முதலில் ஒரு பங்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, அதில் தான் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. அதன் பிறகு மீதம் உள்ள நிலமும் கையக படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலம் அரசுக்கே சொந்தம் : இந்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் மேல்முறையீடு செய்தது. இதனை அடுத்து, அரசுக்கு சொந்தமான 110 கிரவுண்ட் நிலத்தை மீட்க அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் படி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள 110 கிரவுண்ட் நிலம் அரசுக்கே சொந்தம் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Leave a Comment