கர்நாடக முதல்வர் யார்.? பார்வையாளர்களை நியமித்த காங்கிரஸ் தலைமை.!

கர்நாடக மாநில புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்ட பார்வையாளர்களை காங்கிரஸ் தேசிய தலைமை நியமித்துள்ளது. 

கர்நாடக தேர்தலில் 134 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து கர்நாடகாவுக்கு புதிய முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடகா காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே தான் முதல்வர் பதவிக்கான கடும் போட்டி இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை பெங்களூருவில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பார்வையாளர்களை தற்போது காங்கிரஸ் தேசிய தலைமை நியமித்துள்ளது. சுஷில் குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் ஆகியோர் தான் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு, அதனை மேலிடத்திற்கு சொல்வார்கள் காங்கிரஸ் தலைமை கர்நாடகா மாநில புதிய முதல்வர் யார் என்பதை அறிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.