அது மேயர் பிரியாவின் துணிச்சல் – அமைச்சர் சேகர் பாபு

முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அது  பிரியாவின் துணிச்சலாக பார்க்க வேண்டும் அனா அமைச்சர் சேகர் பாபு விளக்கம் 

மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் சேகர் பாபு, மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அதை அவரது துணிச்சலாக பார்க்க வேண்டும்.

ஆய்வின் போது முதல்வருடன் செல்ல வேண்டும் என்பதற்காக சென்னை மேயர் பிரியா துணிச்சலுடன் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தில் ஏறினார் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment