தோனி அடுத்த வருஷமும் விளையாடுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கு என சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
16-வது ஐபிஎல் சீசன் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், நேற்று நடைபெற்ற போட்டி சென்னை அணிக்கு இந்த சீசனில் கடைசி ஆட்டம் என்பதால், மைதானத்தில் ரசிகர்கள் வீரர்களை வரவேற்க காத்திருந்தனர். போட்டி முடிந்த பிறகு, சென்னை வீரர்கள் சேப்பாக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், மைதானத்தை சுற்றி வலம்வந்தனர். கிப்ட் களையும் தூக்கி ரசிகர்களுக்கு வீசினார்கள்.
போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தோனி அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எனவே ரசிகர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம். எப்போதும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
தோனி அடுத்த சீசனும் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் சற்று உற்சாகத்தில் உள்ளார்கள்.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…