Categories: இந்தியா

Telangana: ஒரே நாளில் ரூ.5.5 கோடி அபாரதத் தொகை வசூல் ஆனால் நஷ்டம் 15 கோடி

தெலுங்கானா போக்குவரத்து காவல்துறையின் திடிர் சலுகையால் அபாரதத் தொகை செலுத்த வேண்டிய இ-சலான் மூலம் இன்று ஒரு நாளில் ரூ.5.5 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையில் 75% ,இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு 50%,மற்றொரு சலுகையானது கோவிட் தொற்றுநோய்களின் போது முகமூடிகளை அணியாததால் பெறப்படும் இ-சலான்களுக்கு 90% தள்ளுபடி மற்றும் தள்ளு வண்டிகளுக்கு வழங்கப்படும் சலான்களுக்கு 80% தள்ளுபடி என்ற அதிரடி அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பால் திகைத்துப்போன அபராத் தொகை செலுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 800 முதல் 1000 இ-சலான்களை செலுத்தி தெலுங்கானா போக்குவரத்து துறையை திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இதுபற்றி போக்குவரத்து ஆய்வாளர் (இ-சலான்) எம் நர்சிங் ராவ் கூறுகையில் “வாகன உரிமையாளர்களிடமிருந்து நிலுவையில் உள்ள இ-சலான்களை  தள்ளுபடியில் வசூல் செய்ய திட்டமிட்டு இருந்தோம்.இதில் எங்கள் இலக்கானது சுமார் 2 லட்சம் சலான்ங்கள் செலுத்தப்படும் என்று கணித்திருந்தோம்,ஆனால் எங்கள் கணிப்பை மீறி சுமார் 4.5 லட்சம் சலான்ங்கள் செலுத்தப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் ஆச்சிரத்தையும் தந்துள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல் நாளான இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நிமிடத்திற்கு 1000 சலான்ங்கள் வரை செலுத்தப்பட்டதாக கூறினார்.இந்த மிகப்பெரிய ஆன்லைன் டிராபிக் காரணமாக இ-சலான் செலுத்தும் போது பயனர்கள் சில தொழிநுட்ப கோளாறுகளை எதிர்கொண்டனர்,ஆனால் அதிர்ஷ்டவசமாக முற்றிலுமாக செயலிழக்கவில்லை.

ஹைதராபாத் காவல்துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) ஏ.வி.ரங்கநாத் கூறுகையில்,இன்று பெறப்பட்ட இ-சலான்களின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும்,ஆனால் தள்ளுபடி காரணமாக சுமார் ரூ.கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

8 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

10 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

10 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

10 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

10 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

10 hours ago