தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

ஜல்லிக்கட்டு வழக்கில் கிடைத்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ரகுபதி பேட்டி.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 19, 21-ஐ தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் மீறவில்லை.

மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 51ஏ பிரிவுக்கு எதிரானது இல்லை என கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்று வருகின்றனர்.

அந்தவகையில், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, இந்த தீர்ப்பானது தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டு வழக்கில் வரலாற்று தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு வழக்கில் கிடைத்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி தமிழ்நாடு அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சிறந்த வழக்கறிஞர்களை வைத்து சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுள்ளது. ஒருமித்த தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.